-
Genre:Assorted
-
Originally Published:
Overview
நித்யா இறையன்பு
ஈரோடு மாவட்டம், இயற்கை எழில் கொஞ்சும் சத்தியமங்கலம் நகரில் வாழ்ந்து வருபவர். ஆங்கில இலக்கியம் மற்றும் வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றதோடு, கல்வியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அலுவலக நிர்வாகியாகவும், ஆசிரியராகவும், ஆசிரியர் பயிற்றுநராகவும் கடந்த 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைப் பயணத்தில் கண்ட, கேட்ட, அனுபவித்த பல நிகழ்வுகளை கொரோனா கால ஓய்வு நேரங்களில் சிறுகதைகளாக அவைகளைத் தொகுத்து, பழைய நிகழ்வுகளை பழைய செய்தித்தாளில் படிக்கின்ற உணர்வோடு பழைய பேப்பர் என்ற தலைப்பில் இந்த சிறுகதைத் தொகுப்பை வழங்கியுள்ளார். மேலும் கல்கி, விகடன், கொலுசு ஆகிய வார மற்றும் மாத இதழ்களில் இவரது கதைகள் பிரசுரிக்கப்பட்டு, பல பரிசுகளையும் பெற்றுள்ளன.
“பழைய பேப்பர் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பாகும்.