-
Genre:Assorted
-
Originally Published:
Overview
ஒரு எழுத்தாளரின் பணி பிரச்சினையைத் தீர்ப்பது அல்ல, பிரச்சினையை சரியாகக் கூறுவது.”
– ஆண்டன் செகாவ்
கலை என்பதன் ஆதார உணர்வு சக உயிரின் மீதான அன்பு. அதிகாரத்தின் முன் ஒரு சாமானியனுக்கு ஏற்படும் கையறுநிலை ,மொழி வழியாக கடத்தப்பெறும்பொழுது வலி ஆவணப்படுத்தப்படுகிறது. உடல்மீது நிறத்தால் உயரத்தால் பருமனால் ஊனத்தால் அதிகாரம் முன்வைக்கும் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் சாமானியனின் உரையாடல்களாக இந்த கவிதைகளை பார்க்க முடிகிறது. நிலமே மொழி . இன்மையின் கையறு நிலையை நுட்பமான உணர்வெழுச்சியை தன் கவிதையின் பாடுபொருளாய் தேர்ந்து கொண்டிருக்கும் கவிஞர் திணிக்கப்படும் கற்பிதங்களின் மீது வெளிப்படுத்தியிருக்கும் தார்மீகக் கோபம், வலி மிகுந்த சொற்களால் அறச்சீற்றத்துடன் பதிவு ஆகி இருக்கிறது.
-நேசமித்ரன்
கீதா மோகன் இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் பிறந்தவர். தந்தையை சிறுவயதிலேயே ஈழ யுத்தத்தில் இழந்தவர்.
ஏதிலியாக அம்மாவுடன் தமிழ்நாடு வந்தவர் தற்போது பகுதிநேரமாக சட்டம் படித்து வருகிறார். அலுவலகமொன்றில் கணனி இயக்குநர்.
சமூக சீர்திருத்தம், புரட்சி, ஏழ்மை, காதல், பிரிவுத்துயர் இவர் கவிதைகளில் அதிகம் காணப்படும்,
இன்றைய முகநூல் உலகில் தவிர்க்க முடியாத பெண் கவிஞர்களுள் ஒருவர்.
BOOK DETAILS
- Hardcover: NA
- Publisher: NA
- Language: NA
- ISBN-10: NA
- Dimensions: NA
PREVIEW
Gallery Empty !