Overview
சிறுகதைகள், நாவல்கள், திரைத்துறை கட்டுரைகள், குறுங்கதைகள். அறிவியல் புனைகதைகள், சிறார் நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் என இதுவரை பதினெட்டு நூல்கள் எழுதியுள்ளார். பன்முக நவீனப் படைப்பாளியாகக் கருதப்படும் இவர் தொடர்ந்து 19 ஆண்டுகளாக எழுதி வருகிறார். மலேசியாவிலுள்ள கடாரம் (கெடா) என்கிற மாநிலத்தில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வரும் கே. பாலமுருகன் இதுவரை சிறார்களுக்கு 100க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுகதைகள், நான்கு சிறார் நாவல்கள், பத்துக்கும் மேற்பட்ட சிறுவர் குறும்படங்கள், சிறுவர் சிறுகதை வழிகாட்டி நூல்கள் எனப்படைத்துத் தொடர்ச்சியாகச் சிறார் இலக்கியத்திலும் இயங்கி வருகிறார். இவருடைய ‘பேபிக்குட்டி’ என்கிற சிறுகதை தமிழக அரசின் மேல்நிலை முதலாம் வகுப்பு (11ஆம்வகுப்பு) மாணவர்களுக்கான ‘சிறப்புத்தமிழ்’ என்கிற அரசுப் பாடநூலில் அயலக சிறுகதைப்பிரிவில் பாடமாக இணைக்கப்பட்டுள்ளது. 2000க்குப் பிறகு எழுத வந்த மலேசிய நவீனப் படைப்பாளிகளுள் பாலமுருகன் குறிப்பிடத்தக்கச் சிறுகதை எழுத்தாளராகவும் சிறார் நாவலாசிரியராகவும் கருதப்படுகிறார். இதுவரை கலை, இலக்கியத் துறையில் இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
BOOK DETAILS
- Hardcover: paper back
- Publisher: எழிலினி பதிப்பகம்
- Language: தமிழ்
- ISBN-10: 9798873721436
- Dimensions: 14 x 21.5cm